மட்டக்களப்பில் சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவர் பலி: கருணாவுக்கு சொந்தமான பண்ணை?

Date:

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் நடத்தப்படும் பண்ணையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

யானைக்கு பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே இருவரும் உயிரிழந்துள்ளனர். யானை வேலியில் குறைந்த அழுத்த மின்சாரமே பாய்ச்சப்படும் நிலையில், இங்கு தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பண்ணை கருண அம்மான் எனப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டது. இதே பண்ணையில் கடந்த வருடமளவிலும் சட்டவிரேத மின் இணைப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

தற்போது இந்த பண்ணையை கருணா அம்மானின் நெருங்கிய உறவினர் ஒருவர் குத்தகைக்கு நடத்துவதாக, தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய விபத்தில் புலிபாய்ந்த கல், கிரானை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் ( 51), கிரானை சேர்ந்த  விநாயகமூர்த்தி சுதர்சன், (21)  ஆகிய பண்ணை தொழிலாளர்களே உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்