இலங்கையில் குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா, நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் என்று கூறினார்.
“பாடசாலைகள் விளையாட்டு, கூட்டங்கள் உட்பட, சுட்டெரிக்கும் காலநிலைக்கு மத்தியில் குழந்தைகள் பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவர்கள் ஆஸ்துமா தூண்டுதலால் பாதிக்கப்படுகின்றனர்,” என டொக்டர் பெரேரா எச்சரித்தார், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும், புகைபிடிக்கும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், ஏனெனில் புகைப்பிடிப்பது சுவாச சிக்கல்களை, குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அதிகரிக்கிறது.
“குழந்தை பருவ ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ந்து இருமல் ஆகியவை அடங்கும்” என்று அவர் எச்சரித்தார்.