யாழில் அளவுக்கு அதிகமான ஹெரோயினை ஊசி மூலம் செலுத்திய இளைஞன் பலி!

Date:

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசிமூலம் செலுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியை ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சிவசேதநாதன் கோபிநாதன் (27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் அதிகளவான போதைக்கு அடிமையானவர்.

கலட்டி பகுதியில் நேற்று (23) உயிரிழந்த நிலையில் இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியுள்ளார்.

அளவுக்கதிமான ஹெரோயின் செலுத்தப்பட்டதால் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது தலையில் சிறு காயங்கள் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பிரதேசவாசிகளால் எழுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் செலுத்தியதால் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடலில் ஊசி செலுத்திய அடையாளங்கள் காணப்பட்டன.

போதை ஊசி செலுத்திய பின் அவர் நிலத்தில் விழுந்த போது, தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்