இரத்தினக்கல் மோசடி: யாழ் யுவதிகளும் கைது!

Date:

பண மோசடியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 மாணிக்கக் கற்களை வாங்கி விட்டு அதற்கு செலுத்த வேண்டிய 2 கோடி 87 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை சேமிப்பில் காணப்படாத வங்கி காசோலையை வழங்கி முறைகேடு செய்தமை, நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) கோட்டை பொலிஸ் பிரிவில் ஒருவரை கைது செய்தனர்.

இதனுடன் தொடர்புடைய ஏனைய இருவர் பேருவளை மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள்  24, 30 மற்றும் 36 வயதுடையவர்கள்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 25, 43 மற்றும் 53 வயதுடையவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்