அமெரிக்காவிற்கே வித்தை காட்டும் ஹூதிகளை விரட்ட கடற்படையை அனுப்பும் ரணில்!

Date:

ஹூதி ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக பழிவாங்குவதாகக் கூறும் ஈரானிய ஆதரவு ஹூதி போராளிகளால் செங்கடல் பகுதியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றன.

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறு ஏற்கனவே சரக்குச் செலவுகளை அதிகரித்து, பயண நேரத்தை அதிகரித்துள்ளது. பல நிறுவனங்கள் விநியோக நேரத்தை நீட்டித்துள்ளன.

“செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹூதி தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதை எதிர்கொள்ள, கப்பல்கள் செங்கடலில் செல்லாமல் தென்னாப்பிரிக்காவை சுற்றி திரும்பினால், சரக்கு செலவுகள் அதிகரிக்கும்,” என்று கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்