கலைப் படைப்புகளைப் பாதுகாக்கும் சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு கலைஞர்களிடமிருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற நீதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கலைஞர்களின் தொழில் மேம்பாடு, கலாசார பாதுகாப்பு மற்றும் தொழில்சார் நலனுக்காக இந்த சட்ட வரைவு தயாரிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தச் சட்டங்கள் சர்வதேச பதிப்புரிமை உடன்படிக்கைகளுடன் இணைந்து உள்ளூர் கலைஞர்களின் படைப்பு மற்றும் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கலைஞர்களின் கருத்துக்களையும் கருத்திற் கொண்டு ஆரம்ப அறிக்கையை ஜனவரி 20 க்கு முன் தயாரிப்பதற்காக பாடகர் எட்வர்ட் ஜெயக்கொடி தலைமையில் இருபது பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.




