27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யாழ் பிரபல பாடசாலையில் சம்பவம்: நூலகத்துக்குள் தவறுதலாக வைத்து பூட்டப்பட்ட மாணவன்!

யாழ் நகரிலுள்ள பிரபல பாடசாலை மூடப்படும் நேரத்தில் தவறுதலாக நூலகத்தில் மாணவன் ஒருவர் பூட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்த வாரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

பாடசாலை முடியும் போது, நூலகத்தில் மாணவன் ஒருவர் இருப்பதை அறியாமல், நூலகம் மூடப்பட்டுள்ளது. நீண்ட நேரத்தின் பின் மாணவன் மீட்கப்பட்டார்.

நூலகத்தில் இருந்த மாணவன், பாடசாலை முடியும் நேரத்தில் புத்தகப்பை எடுப்பதற்காக தனது வகுப்பறைக்கு சென்றுள்ளார். வகுப்பறைக்கு சென்ற பின்னர்தான், தனது கண்ணாடியை நூலகத்திற்குள் தவறுதலாக வைத்து விட்டு வந்ததை உணர்ந்த மாணவன், அதை எடுக்க நூலகத்துக்கு சென்றார்.

இதேநேரம் நூலகத்திற்குள்ளிருந்த மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், நூலகம் பூட்டப்பட்டது. இதற்குள், மாணவன் மீண்டும் நூலகத்துக்குள் நுழைந்ததை, சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருக்கவில்லை.

மாணவன் நூலகத்திற்குள் சிக்கிய நிலையில், மாணவனின் தந்தை அவரை ஏற்றிச் செல்ல பாடசாலைக்கு வந்துள்ளார். மாணவன் வராததால், அவர் வீடு சென்று விட்டார் என அவர் திரும்பி சென்றார். மாணவன் வீட்டுக்கும் வரவில்லை. பின்னர் 3 மணியளவில் மீண்டும் பாடசாலைக்கு வந்தார். மாணவன் இல்லை.

பின்னர், நூலகத்திற்குள்ளிருந்த உதவி கோரும் சத்தம் எழுவதையும், யன்னலில் தட்டப்படும் சத்தத்தையும் அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருப்பவர்கள் அவதானித்து தகவல் வழங்கியதையடுத்து, பாடசாலை அதிபர் சம்பவ இடத்தக்கு வந்து பார்வையிட்டு, நூலகத்துக்கு பொறுப்பான ஆசிரியரை மீள பாடசாலைக்கு அழைத்து, நூலகம் திறக்கப்பட்டு, மாணவன் மீட்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

Leave a Comment