28.8 C
Jaffna
December 7, 2023
மலையகம்

பொலிசாருக்கு பயந்து 15 வயது சிறுமியும், 62 வயது முதியவரும் உயிர் மாய்த்தனர்!

புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயபான வத்தை கீழ் பகுதியில் 15 வயதுடைய 10 ஆம் தர மாணவி ஒருவர் பொலிஸாருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டது.

நயப்பன தமிழ் வித்தியாலய மாணவி விக்னேஸ்வரன் வித்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு மூன்று இளைய சகோதரர்கள் உள்ளனர். மேலும் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சம்பவமொன்று தகராறாக மாறி, இரு வீட்டார் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

பின்னர், இரு வீடுகளையும் பிரிக்கும் வகையில் முற்றத்தின் நடுவே வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாவின் தாயும் தந்தையும் நயப்பன தோட்டத்தில் வேலை செய்கிறார்கள், அவர்கள் வரும் வரை இந்தப் பிள்ளைகள் பெரியப்பா வீட்டிலேயே இருந்தார்கள்.

இதேவேளை, சிறுமி வித்தியா தனது பெரியப்பா வீட்டிலிருந்து தமது வீட்டிற்கு வந்தபோது அயல் வீட்டுப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. தாம் பொலிஸில் முறையிடப் போவதாக அந்த வீட்டின் உரிமையாளர் வித்தியாவின் தந்தையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து வித்யாவை தந்தை எச்சரித்துவிட்டு தோட்ட வேலைக்குச் சென்றுள்ளர். பொலிசார் வருவார்கள் என பயந்த வித்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் சென்று கதவையும் ஜன்னலையும் மூடிவிட்டு  தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது மரணத்திற்கு அண்டை வீட்டாரை குற்றம் சாட்டி சில வரிகள் கொண்ட கடிதம் எழுதியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கம்பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அமில டி மெல் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு இது கழுத்து நெரிக்கப்பட்ட மரணம் என்பதை உறுதிப்படுத்தினார்.

மரண விசாரணை அதிகாரி நளின் ஏ.மதிவாக்க மரண விசாரணை நடத்தினார்.

வித்தியாவின் தந்தை ஆறுமுகன் விக்னேஸ்வரன், பெரியப்பா ஆறுமுகன் வாசுதேவன் ஆகியோரும் சாட்சியமளித்தனர்.

முன்னதாக, புஸ்ஸல்லாவ வீதியிலுள்ள அரச கட்டிடத்தில் அறுபத்திரண்டு வயதுடைய ரத்நாயக்க முதியன்செலகே சிறிபாலவும் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

மிளகாய் திருட்டு தொடர்பாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்த அவர், போலீசாரிடம் சிக்கிவிடுவார் என நினைத்து, கைவிடப்பட்ட இந்த அரசு கட்டிடத்திற்குள் விஷம் குடித்துள்ளார்.

விசாரணையில், நிலவும் பொருளாதார சூழ்நிலையால், சிறு திருட்டுகள் செய்தாலும், போலீசில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நண்பர்களுடன் தங்கியிருந்த யுவதியின் மரணத்தில் மர்மம்!

Pagetamil

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Pagetamil

இரண்டு இராணுவத்தினர் தற்கொலை!

Pagetamil

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!