25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

யாழ் ஊடக அமையத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

தலைவர் உரை,செயலாளர் உரை, பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்று புதிய நிர்வாக தெரிவு
யாழ் ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது யாழ் ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக மூத்த பத்திரிகையாளர் சி.நிதர்சனும், பொருளாளராக க.கம்சனனும்
தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, உப தலைவர் , உப செயலாளர் தெரிவை அடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ். ஊடக அமையமானது, 10 ஆண்டுகளை கடந்து 11ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!