25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள்

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

பிரச்சினைக்குரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

பரீட்சை விடைத்தாள்களை விரைவாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 45 நாட்களுக்குள் முடிவுகளை வெளியிடும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் உட்பட பல பங்குதாரர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ விசேட வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாலிம்படை சுமேத வித்தியாலயத்தில் சில பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு பாதுகாப்பாகவும் குறித்த நேரத்திலும் அங்கு செல்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பரீட்சையை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய 40-45 நாட்கள் தேவைப்படும் என்றார். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஒக்டோபர் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிகா சமரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்மாதம் அக்டோபர் 31ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று 45 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் அனைத்தும் நாடு முழுவதிலும் உள்ள பிராந்திய சேகரிப்பு நிலையங்களில் இருந்து இன்று (16) காலைக்குள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் 11 சிறுவர்கள் பரீட்சைக்காக அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறுவர்கள் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். .

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பரீட்சை நிலையமான பொரளை கன்னங்கர வித்தியாலயத்திற்கும், மாத்தறை பொது வைத்தியசாலை மற்றும் கூட்டுறவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுவர்கள் மாத்தறை புனித தோமஸ் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மாணவர், நிக்கவெரட்டிய ஜெயந்தி வித்தியாலயத்திற்கும், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மாணவர் கடவத்தை தர்மதர்ஷி வித்தியாலயத்திற்கும் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிலவும் காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்ட போதிலும், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பரீட்சை இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!