26.1 C
Jaffna
December 22, 2024
Pagetamil
மலையகம்

சட்டவிரோத மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்து ஒருவர் பலி

நேற்று (05) பிற்பகல் பிபில, பதுலகம்மன பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிபில, கரகஹவெல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

25 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் தோண்டும் போது மண் அடுக்கு சரிந்தது.

மண் அடுக்கின் கீழ் புதையுண்ட நபரை மீட்பதற்காக பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், பல மணிநேர நடவடிக்கையின் பின்னர் நேற்று இரவு மண்ணுக்கு அடியில் புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

கண்டியில் வாகன விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு

east tamil

Leave a Comment