Pagetamil
மலையகம்

சட்டவிரோத மாணிக்கக்கல் சுரங்கம் இடிந்து ஒருவர் பலி

நேற்று (05) பிற்பகல் பிபில, பதுலகம்மன பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த மாணிக்கக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிபில, கரகஹவெல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

25 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் தோண்டும் போது மண் அடுக்கு சரிந்தது.

மண் அடுக்கின் கீழ் புதையுண்ட நபரை மீட்பதற்காக பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், பல மணிநேர நடவடிக்கையின் பின்னர் நேற்று இரவு மண்ணுக்கு அடியில் புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment