25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இந்தியா

பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இரத்தம் வழிந்த நிலையில் அரைநிர்வாணமாக வீடுவீடாக உதவிகோரிய 12 வயது சிறுமி: நெஞ்சை உலுக்கும் சிசிரிவி காட்சி!

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கிழிந்த ஆடைகளுடன், இரத்தம் வழிந்த நிலையில் தெருவில் உதவி கோரி திரியும் காட்சி அடங்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பகுதியில் அந்தச் சிறுமி பல மணி நேரத்துக்கும் மேலாக சுற்றித் திரிந்த நிலையில், சிறுமி வீடுவீடாக நின்று உதவி கேட்பதும், பலர் பார்த்துவிட்டு பேசாமல் செல்வதும், ஒரு நபர் அச்சிறுமியை விரட்டியடிப்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இறுதியில் சிறுமி ஒரு ஆச்சிரமத்தை அடைந்தார். அங்கிருந்த மதகுரு ஒருவர், சிறுமி வல்லுறவுக்குள்ளாகியுள்ளார் என சந்தேகித்து, உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.

அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது. அந்தச் சிறுமிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அவரது அந்தரங்க உறுப்புகள் சேதமடைந்துள்ளதை உறுதி செய்த போலீசார், அதிக ரத்தப்போக்கு காரணமாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். பாதிக்கப்பட்டவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிசிடிவி கமராக்களை சோதனை செய்ததில், சிறுமி சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்தக் காட்சி வைரலான நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் பலவும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இச்சம்பவம் பற்றி உஜ்ஜைனி நகரின் போலீஸ் எஸ்.பி. சச்சின் சர்மா கூறுகையில், “இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்துள்ளோம். பொதுமக்களும் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தெரிந்தால் துப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் அவர் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. எப்படி உஜ்ஜயினிக்கு வந்தார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலேயே தகவல்களைத் திரட்ட முயற்சித்து வருகிறோம். அந்தப் பகுதியில் சென்ற வாகனங்களின் அடையாளங்களையும் திரட்டி வருகிறோம்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

Leave a Comment