26 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

நீதிமன்ற வாசலில் நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு காதலனுடன் சென்ற யுவதி!

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை மீட்டுத் தருமாறு பெற்றோர் தரப்பினர் கேட்ட நிலையில் அந்த பெண்ணோ தனக்கு காதலன் கொடுத்த மஞ்சள் தாலியே போதும் என கூறி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கமல்ஹாசனின் மகள் தீபிகா (19). இவர் வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

புதுவை காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் கவுதம்(22). இவர் டிப்ளமோ படித்துள்ளார்.

கவுதம், அம்பத்தூரில் தங்கி வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்த நட்பு வழக்கம் போல் காதலாக மாறியது.

இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற தீபிகா வீடு திரும்பாததால் கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்தார்.

இதனிடையே தீபிகா காதலன் கவுதமுடன் காரைக்காலுக்கு வந்தார்.  இவர்கள் இருவரும் தமிழக எல்லையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தகவலை அறிந்த கமல்ஹாசன், கவுதம் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் சென்னை அம்பத்தூர் போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து மாணவியின் செல்போனை வைத்து அவர் காரைக்காலை அடுத்த நிரவியில் உள்ளது சென்னை போலீஸாருக்கு தெரியவந்தது. போலீஸார் அந்த மாணவியை தேடி நேற்று காரைக்கால் சென்றனர்.

இதை தெரிந்துக் கொண்ட புது திருமணம் செய்த காதல் ஜோடி, காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அவர்களை துரத்தி பிடிக்க வந்த போலீஸாரை வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தாங்கள் திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி அதற்கான சான்றுகளை காதல் ஜோடி போலீஸாரிடம் காட்டினர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் தங்களை மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தீபிகா, எனக்கு 19 வயதாகிவிட்டதால் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை சட்டம் எனக்கு கொடுத்திருக்கிறது. அதனால் நான் உங்களுடன் வரமாட்டேன் என கூறிவிட்டார்.

அப்போது தங்களுடைய பொருட்களை பெற்றோர் தரப்பினர் திருப்பி கேட்டனர். இதையடுத்து தங்க தோடு, செயின், வளையல், வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்துவிட்டு காதலனுடன் சென்று விட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment