25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
மலையகம்

கட்டுகஸ்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி வீடொன்றில் தனியாக இருந்த 57 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை  வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிசிர பிரியந்த குமார என்ற 57 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.  இரண்டு மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டவர் மட்டும் இலங்கைக்கு வந்து, புதிய வீடு கட்டி வருகிறார்.

இந்த வீட்டின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு சேவையை சேர்ந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களான தந்தை மற்றும் மகன் ஆகியோர் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவரான 33 வயதுடைய நபரே கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment