லிபியாவில் இயற்கையின் கோரத்தாண்டவம்: 5,000 இற்கும் அதிகமானவர்கள் பலி; 10,000 பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்!

Date:

லிபியாவை தாக்கிய டானியல் புயலை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் சுமார் 10,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் (IFRC) அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

“காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதுவரை 10,000ஐத் தொட்டுள்ளது என்பதை எங்களின் சுயாதீன தகவல் மூலங்களிலிருந்து உறுதிப்படுத்த முடியும்” என்று லிபியாவில் உள்ள IFRC தூதுக்குழுவின் தலைவரான Tamer Ramadan ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் துனிசியாவில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் கூறினார்.

லிபியாவின் கிழக்கு- மத்திய தரைக்கடல் கடலோர நகரமான டெர்னாவின் நான்கில் ஒரு பகுதி வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. புயலில் நீர்தேக்கமொன்றின் அணைகள் உடைந்து இந்த பேரனர்த்தம் நிகழ்ந்தது. டெர்னாவில் மட்டும் 5,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரதிநிதிகள் சபையால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அல்-கராஸ் செவ்வாயன்று தெரிவித்தார்.

1,300 உடல்கள் குடும்பங்கள் அடையாளம் காட்டிய பிறகு புதைக்கப்பட்டன. முழுமையாக கொல்லப்பட்ட குடும்பங்களும் அடக்கம் செய்யப்பட்டனர்.

இந்த பகுதியில் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர், மேலும் 7,000 பேர் காயமடைந்தனர்.

அடையாளம் காணப்படாத உடல்களின் எண்ணிக்கை மிகப்பெரியது என்றும், ஆதாரங்கள் மற்றும் ஆதரவு இல்லாததால் தற்போது அடக்கம் செய்ய முடியாது என்றும், டெர்னாவில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தாரிக் அல்-கராஸ் தெரிவித்தார்.

இன்னும் பல மீட்கப்படாத உடல்கள் இருப்பதாகவும், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு மீட்புக் குழுக்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்