முல்லேரிய, அம்பத்தல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் சட்டத்திற்கு முரணானது என்பதனால் அதனை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அம்பத்தல புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் இடையில் 400 மீற்றர் தூரமே உள்ளதாகவும் மேலும் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இடையிலான நிலையான தூரத்தை விட குறைவான தூரம் எனவும் சங்கம் கூறுகிறது.
இதன்படி, பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாடிய போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.




