எரிபொருள் நிரப்பு நிலையத்தை நீதிமன்றம் தடை செய்ததற்கான காரணம்!

Date:

முல்லேரிய, அம்பத்தல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் சட்டத்திற்கு முரணானது என்பதனால் அதனை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அம்பத்தல புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் இடையில் 400 மீற்றர் தூரமே உள்ளதாகவும் மேலும் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இடையிலான நிலையான தூரத்தை விட குறைவான தூரம் எனவும் சங்கம் கூறுகிறது.

இதன்படி, பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாடிய போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்