திருமதி இலங்கை – 2023 போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ,2022ஆம் ஆண்டின் திருமதி இந்திய அழகியாக தெரிவாகிய சர்கம் கௌஷல் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு கொழும்பு தாமரை தடாக திரையரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன் இலங்கையை சேர்ந்த 23 திருமணமான பெண்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட உள்ளார்.





