பேலியகொட பகுதியில் மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்தி வந்த சந்தேகநபர் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் நீதிமன்ற உத்தரவை பெற்று, கன்வன்வ சந்தியில் உள்ள விடுதியில் தேடுதல் நடத்தினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், பெண் சந்தேகநபர்கள் 30, 31 மற்றும் 38 வயதுடைய நுவரெலிய, மாரவில மற்றும் பிலிமத்தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் இன்று (07) அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



