ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பின்னணியை அம்பலப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக கொழும்பில் இன்று சிறிய குழு போராட்டத்தில் ஈடுபட்டது.
அதிகார வெறிக்காக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இராணுவப் புலனாய்வுத்துறையின் கூறுகள் செயற்பட்டதாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கொதிப்படைந்த கோட்டாபய ஆதரவாளர்கள் சிலர், தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கம் என்ற பெயரில் இன்று (7) பிற்பகல் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மகஜர் ஒன்றையும் அனுப்பிவைத்தனர்.




