29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 14 பேருக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையில் தமிழர் குடியிருப்புக்களின் மத்தியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் தடைவிதித்ததை தொடர்ந்து, பிக்குகள் காட்டுத்தனமாக செயற்பட்டு, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்குள் புகுந்து கலாட்டா செய்திருந்தனர்.

விகாரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அரச காணிக்குள் பிக்குகள் நுழைய பிரதேச செயலாளர் தடைவிதித்திருந்தார். பிக்களின் கலாட்டாவை தொடர்ந்து, அந்த தடையுத்தரவு விலக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  பெரியவெளி சந்தியில் நாளைய தினம் (03) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், அதற்கு எதிராக விகாராதிபதி தரப்பினரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிசாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட போராட்டத்தரப்பினர் 7 பேருக்கும், விகாராதிபதி உள்ளிட்ட 7 விகாரைக்கு ஆதரவானவர்களுக்கும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வை.முப்லிஹா-

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

தாயை கொன்ற மகன்

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!