இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் நில நடுக்கம்!

Date:

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் செவ்வாயன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்று EMSC தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஊடக தளமான X இல் சில கணக்குகள் நடுக்கம் உணரப்பட்ட வீடியோக்களை வெளியிட்டிருந்தாலும், சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஹோட்டல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்கள் தீ புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழப்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர்...

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்: அரசியல் தலையீடு என சமூக ஊடகங்களில் விமர்சனம்!

யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் நீதிபதி ஆசீர்வாதம்...

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்