Pagetamil
இலங்கை

நாடு முழுவதும் 10,000 இற்கும் அதிக குளங்கள் முற்றாக வறண்டு விட்டன!

தற்போது நிலவும் வரட்சி காரணமாக நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட குளங்கள் முற்றாக வறண்டு விட்டதாகவும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35-40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துறைக்கு கிடைத்த நிதி ஒதுக்கீட்டின்படி, பருவமழைக்கு முன், பழுதடைந்த குளங்களை சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கி உள்ளது என்றார்.

தற்போது நடைபெற்று வரும் எல் நினோ செயல்முறை காரணமாக, அடுத்த பருவத்தில் நல்ல மழை பெய்யும் என்றும், அதற்குப் பிறகு அடுத்த பருவத்தில் மீண்டும் வறண்டு இருக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பருவமழைக்கு முன் இந்த குளங்களை புனரமைப்பதன் மூலம் அதிக நீரைச் சேமித்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குப் பெரிதும் தீர்வு காண முடியும் என்றார் அமைச்சர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!