29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை!

மன்னார் அடம்பன் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 52 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கைத்துப்பாக்கியினால்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டன.

காலை 10.30 மணியளவில் கொலை சம்பவம் நந்தது.

உயிரிழந்தவர்களின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படவுள்ளன.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில காலத்தின் முன் மாட்டுவண்டி சவாரி தொடர்பில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பான பகையினால் இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!