இலங்கையில் பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Date:

இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021, 2022) 263 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ள செயல்திறன் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு (2022) 102 பெண்கள் கொல்லப்பட்டனர். 2021 இல் 79 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2022ல் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை காட்டுகிறது. 2020ல் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 82.

மேலும், பெண் கொலைகள், பாலியல் வல்லுறவு, கொலை முயற்சி, கடுமையான காயம், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், துஷ்பிரயோகம், கடத்தல், உடலுறவுக்கு பெண்களை வழங்குதல் போன்றவற்றுடன், கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 600 வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான 568 வன்முறைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன, 2020 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 595 ஆக இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் (2020, 2021, 2022), 606 பாலியல் வல்லுறவுகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால், பெண்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொல்லப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பட்டப்பகலில் கொல்லப்பட்டுள்ளனர். அனேகமாக அவர்களுடைய வீட்டில் வைத்தே கொல்லப்பட்டனர்.

அது மட்டுமின்றி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவன், காதலன் அல்லது கள்ளக்காதலனால் கொல்லப்படுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்