ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தலைநகர் குயிட்டோவில் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
லாஸ்ஸோ புதன்கிழமை வில்லவிசென்சியோவின் கொலையை உறுதிப்படுத்தினார்.
இந்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒரு பத்திரிகையாளரும் அரசியல் ஆர்வலருமான வில்லவிசென்சியோ ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடக்கவிருந்த தேர்தலில் போட்டியிட பதிவு செய்யப்பட்ட எட்டு ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர்.



