விபச்சார வழக்கில் நாடு கடத்தப்பட்ட பெண் வல்லுறவு!

Date:

வத்தளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை மீளப் பெற்றுத் தரலாம் எனக் கூறி இங்கிரிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்ச்சி செய்து 810,500 ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை தேடுவதாக அவிசாவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விபச்சார நடவடிக்கை காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இடைநிறுத்தப்பட்டுள்ள வீசாவை மீள அமைக்கலாம் என சந்தேக நபர் குறித்த பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் அழைத்ததன் பிரகாரம், அவரைச் சந்திப்பதற்காக அவர் இங்கிரிய பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

சந்தேகநபர், தனது மகன் என அறிமுகப்படுத்தப்பட்ட நடுத்தர வயது ஆணுடன் சேர்ந்து, அந்தப் பெண்ணை சைக்கிளில் அழைத்துச் சென்று காட்டில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்