யாழில் கடன் சுமையிலிருந்து மீள ஹெரோயின் விற்க ஆரம்பித்த நகைப் பட்டறைக்காரரின் மனைவி கைது!

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நகைப் பட்டறை தொழிலாளி ஒருவரின் மனைவி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (4) அவர் கைது செய்யப்பட்டார்.

ஆறுகால்மடம், பழம் வீதியை சேர்ந்த 37 வயதான 4 பிள்ளைகளின் தாயாரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த அவர், இந்த பகுதியை சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளியொருவரை திருமணம் முடித்து, நீண்டகாலமாக அங்கு வாழ்கிறார்.

அவரது வீட்டை சோதனையிட்ட போது 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அவரிடம் ஹெரோயின் வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் தற்போதுதான் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த குடும்பம் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து மீள்வதற்காக ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்