பொகவந்தலாவ பகுதியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (23) இரவு எஸ்.பிரியதர்ஷினி என்ற 15 வயது மாணவியே உயிரை மாய்த்துள்ளார்.
மூத்த சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து சென்றதாகவும், தாய் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு சகோதரர்களைக் கொண்ட இந்தக் குடும்பத்தை உயிரிழந்த மாணவியின் மூத்த சகோதரி கவனித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



