15 வயது சிறுமி உயிர் மாய்ப்பு!

Date:

பொகவந்தலாவ பகுதியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (23) இரவு எஸ்.பிரியதர்ஷினி என்ற 15 வயது மாணவியே உயிரை மாய்த்துள்ளார்.

மூத்த சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து சென்றதாகவும், தாய் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு சகோதரர்களைக் கொண்ட இந்தக் குடும்பத்தை உயிரிழந்த மாணவியின் மூத்த சகோதரி கவனித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்