அஸ்வசும உதவித் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த பொதுஜன பெரமுன எம்.பிகள் கோரிக்கை

Date:

அஸ்வசும உதவித் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, அநீதிக்கு ஆளானவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி, உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.டி.ஜகத் குமார இதனை தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிடும் நடவடிக்கைகள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நேற்று முன்தினம் (21) வரை ஐம்பத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளதாகவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் சுமார் எழுபது கையொப்பங்களைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அஸ்வசும உதவித் திட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட உண்மையான ஏழை மக்களை அதிக அளவில் சேர்க்காமல் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்