நடிகை ஷகிலா தன்னை அத்துமீறி தொட்ட வைத்தியரை அறைந்ததாக கூறியுள்ளார்.
கவர்ச்சியின் எல்லைகளை கடந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷகிலா. குறிப்பாக மலையாள ஆபாச படங்களினால் மிகப் பிரபலமானார். அவர் நடித்த கவர்ச்சி படங்கள் வெளியானால் மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்கள் கூட தங்கள் படங்களை வெளியிடத் தயங்கும் நிலை அப்போது இருந்தது.
அதேபோல் ஷகிலாவின் ஒரு காட்சியையாவது தங்கள் படங்களில் வைக்க வேண்டும் என்று எண்ணிய இயக்குனர்கள் அதிகம்.
அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. சில தமிழ் படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தமிழில் யூடியூப் சேனலுக்காக பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகிலா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், என்னுடைய அம்மா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது டாக்டர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
என்பக்கத்தில் திடீரென வந்து, தொடக்கூடாத இடத்தைத் தொட்டார். எதையும் யோசிக்காமல், டாக்டரை அறைந்து கடுமையாக திட்டினேன்.எனது சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் வந்து என்னை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அனைத்து ஏரியாக்களிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னைகள் உள்ளன என கூறினார்.




