சிஐடியினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு 2 வருட சிறைத்தண்டனையை 5 வருடங்கள் ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் 2019 இல் பதிவாகியுள்ளது.
கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டைவிட்டு வெளியேறிய குற்றப்புலனாய்வுத்துறை அதிகார் நிசாந்த சில்வாவின் விசா விபரங்களை கோரி, தான் கடத்தப்பட்டதாக கானியா குறிப்பிட்டிருந்தார்.




