Pagetamil
இலங்கை

பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலக சட்டமூலம் நிறைவேற்றம்!

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் இன்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (20) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் பேசினர்.

சட்டமூலத்தை முன்வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தன முதலாவது உரையை ஆற்றினார்.

பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை நிறுவுவதற்கும், பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலக பிரதானியின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை குறிப்பிடுவதற்கும், தொடர்புடைய விவகாரங்களுக்காகவும் இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுகிறது என்று அது கூறுகிறது.

இது பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒரு நிறுவனம் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment