யாழ்- சென்னைக்கு இடையில் 100வது விமானசேவை

Date:

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான அலையன்ஸ் எயர் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வது விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூறாவது சேவையை நினைவு கூரும் முகமாக இன்றைய தினம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக துணை தூதுவர், பலாலி விமான நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் எயார் விமானம் மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.

இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில் இச்செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என கூறியுள்ளதோடு அதிகரித்த இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்டி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்றுள்ளது,

spot_imgspot_img

More like this
Related

கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கெலனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை...

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து...

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்