தாயும், குழந்தையும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாயும், மகளுமே குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.




