ஜயனி நடாஷா எதிரிசூரிய மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டு விசாரணைகள் நிறைவடையாத பட்சத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என தெரியவந்துள்ளதால் சந்தேகநபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.




