தையிட்டி போராட்டத்தில் யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்

Date:

வலிகாமம் வடக்கு, தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற வலியுறுத்தி யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மக்கள் பிரதிநிதிகள், தையிட்டியில் போராட்டக் களத்துக்கு சென்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டகளத்துக்கு சென்றனர்.

அங்கு ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்