சூடானில் சிக்கிய 41 இலங்கையர்களை மீட்கவும் இந்திய உதவிதான் தேவை!

Date:

சூடானில் சிக்கியுள்ள 41 இலங்கையர்களை மீட்பதற்கு இந்திய அதிகாரிகளின் உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும், எகிப்தின் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகமும், இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து சூடானில் சிக்கியுள்ள 41 இலங்கையர்களை அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அலி சப்ரி தெரிவித்தார்.

சூடானில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கு 41 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சும் கார்டூமில் உள்ள இந்திய தூதரகமும் இணங்கியுள்ளதாக எகிப்தின் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்