வங்கியொன்றில் இருந்து 65 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பெறுவதற்கு நபர் ஒருவருக்கு உதவியதாகக் கூறப்படும் மஹர கடவத்தை பகுதியில் உள்ள வங்கியின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
“கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாட்டின் முன்னணி வங்கி ஒன்றின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி என்பதுடன், இந்த பிரதான வங்கியின் கிளையொன்றில் இருந்து மற்றொரு நபருக்கு இந்த மோசடியை செய்ய உதவியுள்ளார்” என பொலிஸார் தெரிவித்தனர்.
போலி அடையாள அட்டையை முன்வைத்து வேறு ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு சந்தேக நபர் உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடவத்தை – மஹர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.



