‘எதை செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறார்கள்’: பிரியங்கா சோப்ரா வருத்தம்

Date:

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த சில மாதத்துக்கு முன் அளித்த பேட்டியில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் பாலிவுட் படமல்ல, அது தமிழ்ப் படம்’ என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘சிட்டடெல்’ வெப் தொடரின் புரமோஷனில் கலந்துகொண்ட அவரிடம், இதுபற்றி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “நான் செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டுபிடிக்கமுயற்சி செய்கிறார்கள். அதை, அவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் அதிக சுதந்திர மனப்பான்மையோடு இருந்தேன். இப்போது எச்சரிக்கையுடன் இருக்கிறேன். வாழ்வில் எவ்வளவு உயரத்துக்குச் செல்கிறீர்களோ, அதற்கு அதிகமாக நீங்கள் விழுவதற்கான காரணத்தை சிலர் தேடுகிறார்கள். அதேநேரம் எனக்கு என் குடும்பத்தினரிடமும் ரசிகர்களிடமும் அன்பும் ஆதரவும் உள்ளது. நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்