யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் தாரை வார்க்கும் வடமாகாண ஆளுனரின் முடிவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தொடர்ந்த வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன், யாழ் மாநகரசபை ஆகிய தரப்பினர் இந்த வழக்கில் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 26ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



