இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் கைது!

Date:

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த பெண் பயணிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டு, அவரை தனி அறைக்குஅழைத்து சென்று சோதனை செய்ததில் ரூ.37.25 லட்சம் மதிப்புள்ள 725 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதேபோல், இலங்கையில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் ரூ.35.82 லட்சம் மதிப்புள்ள 697கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இருவரிடம் இருந்து ரூ.73.07 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்