கணவரைப் பிரிகிறார் நிஹாரிகா?

Date:

தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகையான இவர், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள். நாகபாபு, தமிழில் ‘விழித்திரு’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நிஹாரிகா, ஆந்திர போலீஸ் அதிகாரி பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு, உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சைதன்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஹாரிகாவுடன் இருக்கும் அனைத்துப் புகைப்படங்களையும் திருமண வீடியோவையும் நீக்கியுள்ளார். நிஹாரிகாவும் சைதன்யாவை இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார். இதனால் இருவரும் விவாகரத்துப் பெற உள்ளதாகத் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.

பின்னர், நிஹாரிகா பான் இந்தியா ஸ்டார் ஹீரோ பிரபாஸை திருமணம் செய்யப் போகிறார் என்ற மற்றொரு செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

நிஹாரிகாவைப் பற்றிய செய்திகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் இறுதியில் அவர் தனது மைத்துனரான சாய் தரம் தேஜுடனும் உறவில் இருப்பதாக செய்திகள் வந்தன.

எனினும், இந்த செய்தியை இருவரும் மறுத்தனர். ஆனால், திருமண வாழ்க்கையில் சச்சரவுகள் ஏற்பட்டு, கடைசியில் விவாகரத்து வரை சென்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்