27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
குற்றம்

22 வயதான கள்ளக்காதலிக்கு கட்டாயமாக மதுபானம் பருக்கி துஷ்பிரயோகம் செய்தவருக்கு வலைவீச்சு!

22 வயதான கள்ளக்காதலிக்கு மதுபானம் பருக்கி, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

தனமல்வில பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

22 வயதான இளம்பெண்ணொருவர் அண்மையில் திருமணமாகியுள்ளார். அவரது கணவர் தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கணவர் இல்லாத நிலையில், தனது வீட்டுக்கு அயலிலுள்ள ஒருவருடன் அந்தப் பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 7ஆம் திகதி யுவதியை தனது உறவினர் வீடொன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இரண்டு நண்பர்களுடன் மதுபானம் அருந்தியுள்ளார். அப்போது கள்ளக்காதலிக்கும் வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியுள்ளார். இளம்பெண் மறுத்த போது, அவரை கடுமையாக தாக்கி, மதுபானம் பருக்கினார்.

பின்னர் அவரை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடி விட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment