தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மோசமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களும் அந்த பாடசாலையின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் எனவும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர் அதே பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மாணவியை பல சந்தர்ப்பங்களில் இரண்டு மாணவர்களும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1