கழிவறை கொமோட் ஒன்றைத் திருடியதாகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும் ரூ.3,000 அபராதமும் காலி பிரதான நீதவான் இசுரு நெட்டிகுமாரவினால் வழங்கப்பட்டது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் சந்தேகநபருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் தொம்மதுர சுதேயா புஷ்பகுமார (37) என்பவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட கொமோட்டை, வேறு இடத்தில் பொருத்துவதற்காக கழற்றப்பட்ட நிலையில், சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.




