வேலைநிறுத்தத்தால் உயர்தர பரீட்சை முடிவுகளும், O/L பரீட்சையும் தாமதமாகலாம்!

Date:

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும். இதனால் க.பொ.த சாதாரணதர பரீட்சையும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்ப்பதை வரியுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்  என்றார்.

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிடுகையில்-

விடைத்தாள்களை ஆய்வு செய்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்படும். க.பொ.த சாதாரதர பரீட்சைகள்
மே மாதம் நடைபெற உள்ளது. அதுவும் தாமதமாகலாம்.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் நடத்துவோம். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சனைகள் குறையும். அரசாங்கத்தில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அவற்றை சரி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ பற்றியதில் பல கடைகள் எரிந்து சாம்பல்

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று புதன்கிழமை...

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்