“ஒரு ஜனநாயக நாட்டில், அரசியல்வாதிகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களின் விவகாரங்களில் ஈடுபட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்துவது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலையாகும்” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக இயங்கி வந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுதந்திரம் தற்போது சவாலுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.
“பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுதந்திரம் பற்றி அனைவரும் அறிந்தவர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிவதுடன், முறைமை மற்றும் அவர்களின் மனசாட்சியின்படி செயல்படவில்லை” என ரத்நாயக்க கூறினார்.
நல்லாட்சிக்கோ அல்லது நாட்டின் ஜனநாயகத்திற்கோ நல்லதல்ல என்பதால், இந்த நிலை எதிர்காலத்தில் தொடராது என நம்புகிறோம்.
எவ்வாறாயினும், அண்மையில் தனது அனுமதியின்றி மின்கட்டணத்தை உயர்த்தியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார்.
“சமீபத்திய கட்டண திருத்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணங்களை நான் சவால் செய்யப் போகிறேன், அதை மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். இது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட முறையான ஆவணம் அல்ல,” என்று தலைவர் கூறினார்.



