மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்ததாக யாழ். போதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்ததை அடுத்து அவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் இரவு பத்து மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை(13) காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதன வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.




