28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

காலி கடற்படை தாக்குதல் வழக்கில் கைதான 4 அரசியல் கைதிகள் 14 வருடங்களின் பின் பிணையில் விடுதலை!

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி, அரசியல்கைதி கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 பேரிற்கு பிணை வழங்கினார்.

2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி கடற்படையை சேர்ந்த கனக சுரங்கவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் 22 பேருக்கு கடும்காயங்களை ஏற்படுத்தி கொலை செய்வதற்கு எத்தனித்ததாக 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் காலி மேல் நீதிமன்றில் 2010ம்
ஆண்டு நான்கு எதிரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கின் முதலாம் எதிரி கந்தையா இளங்கோ யுத்தத்தின் இறுதிகாலகட்டமான 2009ல் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம்
ஒப்படைக்கப்பட்டார்.

புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவிற்கு எதிராக வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும், 77 சாட்சிகளும், 27 தடயப்பொருட்களும் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் அரச தரப்பு சான்றாக
பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.

முதலாம் எதிரியின் சார்பில் முன்னிலையான ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது பிணை மனு சமர்பணத்தில், கந்தையா இளங்கோவினால் வழங்கப்பட்டதாக அரச தரப்பில்முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்கு மூலம் உண்மை விளம்பல் விசாரணையில் 21.06.2018 ஆம் ஆண்டு நீதிமன்றினால் நிராகரிக்கபப்பட்டு 5 வருடங்கள் அண்மிக்கின்றது என்பதுடன், மேலும் 2009 ஆம் ஆண்டு விமானப்படையின்
குண்டு வீச்சினால் இளங்கோ தனது வலது காலை இழந்ததுடன் கடந்த 15
வருடங்களாகியும் விசாரணை முற்று முழுதாக நிறைவடையாது சிறையில்
வாடுவதனையும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கே.வி.தவராசாவின வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி முதலாம் எதிரியான
கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 தமிழ் அரசியல் கைதிகளிற்கும் இன்றைய தினம் பிணை வழங்கினார்.

5 இலட்சம் ரூபா காசுப்பிணையிலும், 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம்
மொகமட் பாரி ஆஜரானதுடன், அரசியல் கைதியின் சார்;பில் சட்டத்தரணி
தர்மஐா தர்மராஐாவின் அணுசரனையில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஐரானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment